Showing posts with label SK-a-vithai. Show all posts
Showing posts with label SK-a-vithai. Show all posts

Wednesday, June 2, 2010

அவலம்

நெடுநாள் கழித்து கவிதை வாசித்தேன்.
நெடுஞ்சாலை இரைச்சலில்
நிமிட நேரம் காதடைத்ததால்
நிகழும் பேரமைதி.
வாழ்க்கையிலிருந்து வெளியேறிய உணர்வுகள்
வெறும் வரிகளில் மட்டும்.

Wednesday, February 10, 2010

Sk-vithai

காதல் கண்களை பறிப்பதில்லை -
வேறாக மாற்றி விடுகிறது.

பி.கு.
சில விளக்கங்கள் இங்கே தேவை என்று
நினைக்கிறேன். இந்த கவிதை (அ) ஹைக்கூ வேற்று பாலிடம் தோன்றும் காதலை மட்டும் குறித்து அல்ல. காதலிக்கப்படுவது ஆணாகவோ இல்லை பெண்ணாகவோ தான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒரு பொருளாகவோ, கருத்தாகவோ இருப்பினும் இது பொருந்தும். பொதுவாக, காதலுக்கு கண் இல்லை என்பார்கள். என்னை பொறுத்த வரை, அது பார்வை மாற்றம் மட்டுமே. அநேகமாக, இது இன்னும் விரிவாக அடுத்த பதிவில் தொடரும் என்று நினைக்கிறேன்.

Sunday, January 24, 2010

Sk-vithai

உறவுகளின் உரம் -
உணர்வுகளின் நிர்வாணம்.

Friday, July 17, 2009

EKSI!!!!

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் என் முகம்!!!
உன் கண்களில் நான் தொலைந்து போனதை யார் அறிவார்? ;)

Thursday, March 19, 2009

SK-a-vithai

அடுத்த சில நிமிடங்களில்,
அந்த பொம்மை எனக்கு அலுத்திருக்கும்.
அவசரமாய் நீ பறித்ததனால்,
அடிமனதில் ஆறாக் காயம்.